கல்பாக்கம், செப். 27- காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம், முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பிரிவுகள் இயங்கி வருகின்றன. அணுமின் நிலையத்தில், அணுக்கசிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் இட மாற்றம் செய்வது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கதிரியக்க அவசர நிலை என்ற பெயரில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக மேற்கண்ட ஒத்திகை நிகழ்ச்சி, எந்த கிராமப்பகுதியில் நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு அங்கு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், முதல் முறையாக பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், அணுமின் நிலைய அதி காரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட வைகளின் செயல்பாடுகளை கண்டறி வதற்காக, இம்முறை எந்தப்பகுதி என அறி விக்காமல் திடீர் அறிவிப்புகளுடன் கதிரி யக்க அவசர நிலை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், காற்று வீசும் திசையை கண்டறிந்து ஆரம்பாக்கம், குன்னத்தூர், நீராடி, நெய்குப்பி, வெங்கம்பாக்கம், மெய்யூர் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய அதிகாரிகள் மேற்கண்ட கிராமங்க ளில் கதிர்வீச்சு குறித்து அறிவித்தனர். அந்த நேரத்தில் மீட்பு பணிகளை எவ்வாறு மேற் கொள்வது என்பதுகுறித்து செயல்விளக்கம் அளித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.