tamilnadu

மின்னணு அச்சுத் தொழில் கண்காட்சி

சென்னை, ஜூன் 3- இ ஏஜ் பிரிண்ட் (2019)  என்ற  மின் னணு கால அச்சுத்தொழில் குறித்த  கண்காட்சியை சென்னை  நந்தம்பாக்கத்தில்  தமிழக ஆளுநர் பான்வரிலால் புரோ `ஹித் துவக்கிவைத்தார்.மெட்ராஸ் பிரிண்ட் டர்ஸ் அண்ட் லித்தோ கிராபர்ஸ் அசோசியேஷன் (எம்பி எல்ஏ) மற்றும் மெஸ்ஸி இந் தியா சார்பில் சென்னையில் நடைபெறும் நான்கு நாட்கள் கண்காட்சி ஜூன் மாதம் 3ஆம் தேதி வரை நடக்கிறது.தொடக்க விழா நிகழ்ச் சியில் அகில இந்திய  மாஸ் டர்ஸ் பிரிண்ட்டர்ஸ் சம் மேளன (புதுடில்லி)  தலை வர் ரவீந்திர ஜோஷி, எம்பி எல்ஏ  தலைவர் ஜி என். சிவ க்குமார், செயலர் ஆர். அன் பழகன், கண்காட்சி மற்றும் மாநாட்டு தலைவர் சந்தர், அச்சு தொழில் சங்க நிர்வா கிகள்ஆகியோர் கலந்து கொண்டனர்.பிரிண்டிங், பேக்கேஜிங் மற்றும் அது தொடர்புடைய தொழில்கள் தொடர்பான அனைத்து தீர்வுகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து  தென்னிந்தியாவில் நடைபெற்ற ஒரே பிரம் மாண்டமான கண்காட்சி யாக இதுவேயாகும்.இந்திய பிரிண்ட்டிங் பேக் கேஜிங் மற்றும் அது தொடர்பான இயந்திரங் களை உற் பத்தி செய்வோர் சங்கமும் (அய்பிஏஎம்ஏ) அகிலஇந்திய மாஸ்டர்ஸ் பிரிண்ட்டர்ஸ் சம்மேளன மும் (ஏஅய்எஃப் எம்பி) மற் றும் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் பிரிண்ட்டர்ஸ் சம்மேளன மும் (டிஎம்பிஎஃப்) இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.