tamilnadu

விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற மின்வாரியம் உறுதி

விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை  நிறைவேற்ற மின்வாரியம் உறுதி

விழுப்புரம், ஏப்.22- விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மின்சார வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டத்திற்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறைந்த மின்சாரமே வருவதால் விவசாயிகளின் மின்மோட்டார் பழுதடைவதும், பயிர்கள் காய்ந்து கருகி போவதும் வழக்கமாக உள்ளது. மேலும் மும்முனை மின்சாரம் எந்த நேரத்தில் கொடுக்கிறார்கள் என்று தெரியா மல் விவசாயிகள் அல்லப்படுவது தொடர்கதையாகவும் உள்ளது. இந்நிலையில் மேல்மலையனூர் வட்டம் வளத்தி அடுத்த கூடுவாம் பூண்டி பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை உருவாக்கும் நிலையில் உள்ள தாழ்வான மின்கம்பிகளை சரி செய்ய வும் வலியுறுத்தியும்  செஞ்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மேல்மலை யனூர் வட்ட செயலாளர் எழில் ராஜா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் ஆர்.தாண்டவராயன், துணை தலைவர் கோ.மாதவன், சிபிஎம் மேல்மலையனூர் வட்டச் செயலாளர் ஹரிஹர குமார் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுரேஷ்,ரவி, மனோகர், பிரவீன்குமார், வடிவேல், செஞ்சி சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செயற்பொறியாளர் அலு வலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் கூடுவாம்பூண்டி பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடத்தை பார்வை செய்து ஒரு மாதத்திற்குள் கருத்துரு மேலதிகாரிகளுக்கு அனுப்பு வது எனவும் முடிவெடுத்தனர், மேலும் குறைவழுத்த மின்சாரத்தை சரி செய்வ தாகவும், தாழ்வு நிலையிலுள்ள மின்கம்பி களை சரி செய்வதாகவும், எழுத்துப்பூர்வ மாக செயற்பொறியாளர் உறுதியளித்தார்.