சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் மின்வாரியங்களை கம்பெனிகளாக பிரிக்கப்பட்டு, தனியாருக்கு விடுவதற்கான நடவடிக்கையை மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கெதிராக போராடி வரும் மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவாக, செவ்வாயன்று (டிச 10) தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.