tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு

திருவண்ணாமலை,ஜுன் 25- இந்திய மாணவர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு கூட்டம் திருவண்ணாமலை தமிழ்மின் நகரில்  நடைபெற்றது.

சுஜய் தலைமையில் விக்னேஷ், சாரதி, தமிழ்சோலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்கம்  கடந்து வந்த பாதை பற்றி  மாநில நிர்வாகி சம்சீர் அகமது, மாணவர் சங்க  அமைப்புச் சட்டம்  பற்றி மாநில துணை தலைவர் தமிழ்பாரதி ஆகியோர் உரையாற்றினர்.  மாவட்டத்தில் நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்ட செயலாளர் கோபிநாத் மற்றும்  வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் சி. எம். பிரகாஷ் உரையாற்றினர்.

புதியநிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்ட  தலைவராக  ரா. விக்னேஷ்,   செயலாளராக  வெ.கோபிநாத்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

காலமானார்

புதுச்சேரி,ஜூன் 24 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், தந்தையார் வெ.வெங்கடாசலம் உடல் நலக்குறைவால் திங்கட்கிழமை அதிகாலை காலமானார் அவருக்கு வயது 87.

புதுச்சேரி  சூரமங்கலம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், கலியமூர்த்தி, பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சீனிவாசன்,  தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள்  உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சூரமங்கலத்தில் உள்ள இடுகாட்டில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், தந்தையாரை இழந்து வாடும் பெருமாளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலை  தெரிவித்துக் கொண்டு, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இலவச வீட்டு மனை கேட்டு ஆட்சியருக்கு மனு

ராணிப்பேட்டை, ஜூன் 24 – ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், மருதாலம் மதுரா நீலகண்டராயன்பேட்டையில் வசிக்கும் பெண்கள் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு சொந்தமாக  நிலமோ, வீடோ இல்லை. வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்களன்று (ஜூன் 24) 20 க்கும் மேற்பட்ட  பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள்  சங்க சோளிங்கர் தாலுகா செயலாளர் ஜெய்சங்கர் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் இலவச வீட்டு மனை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய  வேண்டும்: ஆட்சியர் பிரசாந்த்

கள்ளக்குறிச்சி ஜுன் 24- கள்ளக்குறிச்சி மாவட்ட பிரசாந்த்  தலைமையில் திங்களன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், தமிழ்நாடு அரசு திட்டங்கள் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளும் தங்களது துறை வாரியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும்,  கடமையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உள்ளது.எனவே திட்டங்களை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

இதேபோன்று துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை தாமதமின்றி உடனுக்குடன் முடித்து பணி முன்னேற்றத்தை மேம்படுத்துவ துடன் துறை வாரியான ஆய்வுகள் நடத்தி  குறைகளைக் களைந்து திட்டங்களை செயல்படுத்தவும் அலுவலர்கள் விரைவாகப் பணியாற்ற வேண்டுமெனவும்  கேட்டுக்கொண்ட ஆட்சியர் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கிராம நிர்வாக அலுவலர் கள்,  மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள்,  வருவாய்த் துறையினர், கலால் அலுவ லர்கள் தீவிரமாக கண்காணித்து காவல் துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து கொள்ளலாம்: நீதிபதி ஜவகர்

கடலூர் ஜூன் 24- உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான  ஜவகர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற ஜூலை 29-ம் தேதி முதல்  ஆகஸ்ட் 3-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிக்க சிறப்பு மக்கள் நீதி மன்றத்திற்கு உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை சமரசமாக பேசி தீர்வு காணலாம். அவ்வாறு தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் முழு வதும் திரும்பப்பெரும் வசதியுடன் வழக்கு களை விரைவாக தீர்வுகாண ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள  வழக்காடிகள் தங்களுடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொளி வாயிலாகவோ கலந்து கொண்டு தங்க ளுடைய வழக்குகளை சமரசமாக பேசி  தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.