சென்னை, ஜன. 4- நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜனவரி 8 அன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ள னர்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி வரும் மே மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மே தொடக்கத்திலோ, இறுதியிலோ நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மக்களவைக்கான 18ஆவது தேர்தலாகும். இந்தியா முழுவதும் மொத்தம் 543 மக்க ளவைத் தொகுதிகள் உள்ளன.
தற்போது உள்ள சூழலில் இரண்டு பிரதான கூட்டணி வரும் தேர்தலில் முக்கியத்துவம் பெறு கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகள் முன்னெடுத்துள்ள இந்தியா கூட்டணிக்கு இடையேதான் பலமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வரும் 8ஆம் தேதி சென்னை யில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை தர உள்ளனர்.
இந்த ஆலோசனையில் மாவட்ட ஆட்சி யர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாது காப்புகள் தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோ சனை நடைபெற உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் குறித்தும் இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் இறுதி செய்ய வாய்ப் புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது.