tamilnadu

img

மெட்ரோ ரயிலில் விரைவில் டைனமிக் ரூட் மேப் வசதி

சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் (Dynamic Route Maps) வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  சென்னை யில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத் துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து  வருகிறது. கடந்த மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ  ரயில்களில் பயணித்தனர். 

சென்னையில் அடுத்தக்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக் கேற்ப பல்வேறு திட்டங்களை முன்னெ டுத்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரி வித்துள்ளது. இப்போது, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ வழித்தடங்கள் குறித்த தகவலை வழங்க எல்.இ.டி. ஸ்கிரீன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக Nusyn டிஜிட்டல் சொல்யூசன்ஸ் உடன் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வசதி அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன் பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

விரைவில் அறிமுகமாகும்  புதிய வசதி

வழித்தடங்களில் முக்கியமான இடங்கள் குறித்த தகவலும் இடம்பெற்றி ருக்கும். அதோடு, ஒவ்வொரு ரயிலிலும் இதுபோன்ற 16  வரைபடங்கள் அமைக்கப் பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மெட்ரோ ரயிலில் பயணிப் பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,ரயில் செல்லும் வேகம், அதோடு ரயிலுக்கு உள்ளே மற்றும் வெளியே வெப்பநிலை பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவைகளும் அதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான முழு திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக் குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் சலுகை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ள க்யுஆர் குறியீடு (OR Code)  பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகை யாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.  வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

சென்னையில் மெட்ரோ சேவை 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வழித்தடங்க ளிலும் 600 ஜோடி ரயில்கள் இயக்கப்படு கிறது. கூட்டம் மிகுந்த நேரங்களின் பயணி கள் காத்திருப்பதை தவிர்க்க ரயில்களில் எண்ணிக்கையை 36-இருந்து 46 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.  

7 நிமிட இடைவெளியில்  ரயில் சேவை

அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாமல் மற்ற நேரங்களில்  9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரு கிறது. இப்போது, 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை பெய்யும் நேரங்களில் மக்களின் வசதிக்கு ஏற்ப நெரிசல்மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.