tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தாமரையை தோற்கடிக்க குக்கருக்கு ஓட்டு கேட்ட டிடிவி தினகரன்
கோயம்புத்தூர்,  ஏப்.9- கோவை நாடா ளுமன்ற தொகுதி யில் பாஜக வேட்பா ளர் அண்ணாமலைக்கு ஆதரித்துப் பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், குக்  கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த வர்கள், ‘தாமரை’ என குரல் எழுப்பவே,  தேனியில் பிரச்சாரத்தில் இருந்ததால் அதே ஞாபகத்தில் பேசி விட்டேன் என்று  சமாளித்துள்ளார். அதேபோல அண்ணா மலையை வெற்றி பெற செய்வதன் மூலம்  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ப தைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் ‘தாமரையை வீழ்த்த’ நீங் கள் துணை புரிய வேண்டும் என்றும் பேசி பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை

சென்னை, ஏப்.9- அமைச்சர் உதயநிதிக்கு மிகவும்  நெருக்கமானவர் சென்னை மேற்கு  மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு. அவ ரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் வழக்கில் ஜாபர்  சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்  பட்டார். இந்த நிலையில், சென்னை மயி லாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள  ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகங் கள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள  ஜேஎம்எஸ் ரெசிடென்சி என்ற ஹோட்ட லில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்  திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சோதனை நடத்தினர்.

இயக்குநர் அமீர்
அதேபோல், சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சென்னை மேற்கு மாவட்ட திமுக செய லாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டனர் சென்னையில் 30-க்கும் மேற் பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

தங்கர் பச்சானுக்கு ஜோசியம் கிளி ஜோதிடருக்கு  நேரம் சரியில்லை...
கடலூர், ஏப்.9- கடலூர் தொகுதி பாமக வேட்பாளர்-  திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்,  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது,  தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்ய னார் கோயிலுக்கு வெளியில் இருந்த கிளி ஜோசியரிடம் தனக்கு கிளி ஜோசி யம் பார்க்கும்படி கூறினார். அவ்வாறு,  ஜோசியம் பார்த்த போது, அவருக்கு வந்த அட்டையில் அந்த கோயிலில் உள்ள அழகுமுத்து அய்யனார் சாமியே வந்ததால், உங்களுக்கு வெற்றி என அந்த கிளி ஜோசியர் கூறினார். தங்கர் பச்சானுடன் வந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வீடியோ எடுத்  தும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட னர். ஆனால், அதுவே கிளி ஜோசியக் காரருக்கு துயரமாக மாறியது. பச்சைக்  கிளிகளை கூண்டில் அடைத்து வைப் பது சட்டப்படி குற்றம் என்பதால், வனத் துறையினர் வழக்கு பதிவு செய்து, கிளி  ஜோசியம் பார்த்த செல்வராஜ் மற்றும்  சீனிவாசன் ஆகியோரை இரண்டு நாட்க ளாக தேடிப் பிடித்து, அவர்களிடம் இரண்டு கூண்டுகளில் இருந்த நான்கு  கிளிகளைப் பறிமுதல் செய்தனர். இதற்கு பாமக தலைவர் அன்புமணி  கொந்தளித்துள்ளார். இது பாசிச நட வடிக்கை என்று ஆவேசப்பட்டுள்ளார்.

சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்   
சிவகங்கை - காரைக்குடி, 
திருச்சி - கந்தர்வகோட்டை

ஜி. ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
தர்மபுரி

குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
சென்னை, ஏப்.9- கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அமைச்சகங்கள் மற் றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

இவற்றுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு  நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 50 ஆயிரம் பேர்,  அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வை  எதிர்கொண்டனர். இதனை தொடர்ந்து, குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணி யிடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த  ஜனவரி மாதம் வெளியானது.

இந்நிலையில், 5 ஆயிரத்து 990 பணி யிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத  குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவு களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்  வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட் டுள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதல்: 2 தமிழக மீனவர்கள் காயம்
இராமநாதபுரம், ஏப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், திங்களன்று இந்  திய எல்லைப் பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் 50க்கும் மேற்பட்ட மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்கச்சிமடத்தை  சேர்ந்த சேசு ராஜா என்பவருக்குச் சொந்த மான படகை கற்கள் மற்றும் கட்டை களைக் கொண்டு இலங்கை கடற்படை யினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ராமேஸ்வரம் முத்துராமலிங்க  தேவர் நகரை சேர்ந்த ராஜா, மீனவர்  மெக்கான்ஸ் என்ற இரண்டு மீனவர்  களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மேல் சிகிச்சைக்  காக இராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் பறிமுதல்

சென்னை, ஏப்.9- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தில் காவல்துறையினர் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து  வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணி ஒரு வரின் கைப்பையை சோதனை செய்த னர். அப்போது கட்டுக்கட்டாக ரூ. 30 லட்சம்  இருந்தது. எந்த ஆவணமும் இல்லாத தால் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர்.