tamilnadu

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்

போதைப்பொருள் கடத்தல்: 
ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்

சென்னை, ஏப். 21- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சட்ட விரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்நிலையில், அந்த ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் திங்களன்று தீர்ப்ப ளித்துள்ளார். அப்போது, தில்லியின் முன்னாள் முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி சுந்தரமோகன் உத்தரவிட்டார்.

நிபந்தனைகள்:

ரூ.5 லட்சம் சொந்த ஜாமின், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஜாபர் சாதிக், அவரது சகோதர் முகமது சலீம் இருவரின் பாஸ்போர்ட்டை சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நேரில் ஆஜராக வேண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் ஜாமின் ரத்து செய்யப்படும்.