tamilnadu

img

ஓட்டுநர் தனியார்! நடத்துநர் அரசு! எடப்பாடி அரசின் விபரீதம் - ஆர்.மனோகரன்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் 19,489. இதில் பயணம் செய்வோர் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 74 லட்சம் பேர். கிராமப் புற வருமானமில்லா வழித்தடங்களிலும் பேருந்து களை இயக்கி மக்கள் போக்குவரத்தில் சேவை யில் 60 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றி, பொது  போக்குவரத்தில் இன்றளவும் தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது அரசு போக்கு வரத்துக் கழகங்கள். விபத்தில்லா இயக்கம், வருவாய் பெருக்கல், டீசல் சிக்கனம், இவை களில் இந்திய அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளது. ஊழியர்கள் செயல்திறனிலும் சிறப்பான இடத்தையே பெற்றுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அரசு விரைவு போக்குவரத்து, மாநகர போக்குவரத்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல் வேலி, கும்பகோணம் ஆகிய கோட்டங்களில் 1 கோடியே 43 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பணிமனைகள் உள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு நாள்தோறும் லட்சக் கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

5 ஆண்டாக பணி நியமனமில்லை
மக்கள் போக்குவரத்து சேவையில் மகத்தான பங்களிப்பை செய்து வரும் போக்குவரத்துக் கழகங்களை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்து இயற்கை மரணம் அடைவதற்கு அரசு  எத்தனிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு காட்டிய ஆர்வத்தை  பணியாட்களை நியமிப்பதற்கு காட்டவில்லை.  கடந்த 5 ஆண்டுகளாக புதிய பணியாட்கள் நியமனம் இல்லை. ஆனால் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களோ ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர். 1985 வாக்கில் பணியில் சேர்ந்த தொழி லாளர்கள், 2018-2019ல் மட்டும் சுமார் 6000 பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள். போக்குவரத்துக் கழகத்தில் பணியாட்கள் விகிதப்படி  50,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஓட்டு நர், நடத்துநர், அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட வேண்டும். ஆனால் அரசு புதிய நியமனம் செய்ய மறுக்கிறது. வேலையில் இருக்கும் போது பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரி சுக்குக் கூட பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியில் மட்டுமே  30 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான வேலைப் பளு விற்கு உள்ளாகிறார்கள். இரண்டு நாள், மூன்று நாள் ஓய்வின்றி தொடர்ந்து பணி பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்நிலை தொடர்வ தால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். ஏன்? திடீர் மரணங்களைக் கூட சந்திக்கிறார்கள். பேருந்துகளை முறை யாகப் பராமரிக்காமல் நிறைவான பேருந்து இயக்கத்தை நடத்த முடியாமல் கழகங்கள் தத்தளிக்கிறது.

கமிஷன் பெறுவதிலேயே கவனம்
ஊழியர்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படு வது இல்லை. போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நிதி இழப்பை சேவைத் துறை என்ற முறையில் அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் ஆண்டுக்கணக்கில் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. ஊதிய ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்த மறுக்கிறது. ஓய்வு பெற்று இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணப்பலன்கள் கணக்கு முடிக்கப்படாத தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் போக்குவரத்துக் கழகங்கள் எவ்வாறு செயல்படும்? பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்க, ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அக்கறையற்ற அரசு புதிய பேருந்துகள் வாங்கு வது, வழித்தடங்களில் இயக்குவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு கூட விழா எடுத்து கழகப் பணத்தை விரயம் செய்வது, இவை அனைத் திலும் கமிஷன் பெறுவதிலேயே கவனம் செலுத்துகிறது அரசு.

மோடி அரசு பாதையில்  எடப்பாடி அரசு
தில்லி, அகமதாபாத், மும்பை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் 5,595 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்திலும் 525 பேருந்துகள் இயக்கப்படும் என எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. இதற்கான டெண்டர் வருகிற அக்டோபர் 10 அன்று அரசு போக்குவரத்து நிறுவனம் சென்னை தரமணியில் விடப்பட உள்ளது. மின்சாரப் பேருந்துகள் அனைத்தும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப் படும். ஓட்டுநர்களை தனியார் நியமித்துக் கொள்வார்கள். அரசு போக்குவரத்துக் கழக  நடத்துநர்கள் பயணக்கட்டணம் வசூலிப் பார்கள். மின்சார பேருந்துகளுக்கான மின்சக்தி  சார்ஜ் வசதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிறுவப்படும். இப்பேருந்துகள் தமிழகத்தில் வேலூர், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை நகரங்களில் தனியார் மூலம் இயக்கப்படுமாம். இந்நிலையை நினைத்தால் “கேனப்பயல்கள் ஊரில் கிறுக்குப்பயல்கள் நாட்டாமையாம்” என்ற கிராமத்து சொலவடை தான் நினைவுக்கு வருகின்றது. அப்படி எனில் போக்குவரத்துக் கழகங்கள் பொதுத்துறையாக நீடிக்குமா? காலப்போக்கில் முழுவதும் தனியார் மயமாகுமா? போக்கு வரத்துக் கழகங்களில் இனி வேலை வாய்ப்பு என்பது இருக்குமா? என்ற கேள்விகளை போக்கு வரத்துத் தொழிலாளர்களும் பொது மக்களும் எழுப்புகிறார்கள். பொதுத்துறை போக்கு வரத்தை காக்க, தனியார்மயத்தை தடுக்க பொது மக்களும் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். 

கட்டுரையாளர்: சிபிஎம் தஞ்சை  மாவட்ட செயற்குழு உறுப்பினர்.