tamilnadu

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்புவதைக் கைவிடுக!

சென்னை, ஜூன் 21 - அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங் களை தனியார் மூலம் நிரப்பு வதற்கான நடவடிக்கைகளை கை விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் தமிழக மக்க ளுக்கு சேவை அளிக்கக் கூடிய முக்கியமான நிறுவனமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல் பெரும்பகுதியான பேருந்துகள் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டுள்ளன. இத னால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பயணிகளின் பாது காப்பை உறுதி செய்திட காலாவதி யான பேருந்துகளை அப்புறப் படுத்திவிட்டு, புதிய பேருந்து களை இந்த நிதியாண்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

போக்குவரத்துக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இல்லாததால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் போதிய அளவில்  பேருந்து களை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்கும் கூடுதலான வேலைப்பளு அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தொழிற்சங்க பிரதி நிதிகள், அரசியல் கட்சி இயக்கங் கள் தொடர்ந்து குரலெழுப்பி வரு கின்றன. இந்நிலையில் இப்பணி யிடங்களை நிரப்புவதற்கு பதிலாக,  அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் ஈடு படுத்த திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட போக்குவரத்து கழ கங்கள் டெண்டர் விட்டுள்ளன.

இதனை எதிர்த்து தொழிலா ளர்களின் தரப்பில் சிஐடியு தொழிற் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தது. இவ்வழ க்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்தமுறை தவறு; அது இட  ஒதுக்கீட்டிற்கு எதிரானது; மக்களின்  போக்குவரத்து சேவையையும் பாதிக்கும்;  இரண்டு விதமான சம்பளமுறை என்பது பொதுத் துறையில் இருப்பது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்த முறையை  அனுமதிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக போக்குவரத்துக் கழக நிர்வாகங் கள் டிவிசன் பெஞ்சில் மேல்முறை யீடு செய்து, ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதம் செய்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மாறான தீர்ப்பைப் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டிய அரசே, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறையை திணிப்பது தொழிலாளர்களையும், அரசு வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் இளைஞர்களையும் வஞ்சிக்கும் செயலாக அமைந்துள்ளது. போக்கு வரத்து கழகங்களை பலவீனப் படுத்துவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும், பயணிகளின் சேவையையும் கேள்விக் குள்ளாக்கியுள்ளது. 

போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 50 ஆண்டுகளில்  இல்லாத ஒரு நடைமுறையை உள்ளே புகுத்தி, படிப்படியாக போக்கு வரத்துக் கழகங்களை சீர்குலைத்து  தனியாருக்கு ஒப்படைக்கும் நட வடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த அணுகுமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ப தையும், தமிழக அரசு இந்த  முடிவை உடனடியாக கைவிட  வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. எனவே, சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்த  முறையைக் கைவிட்டு, போக்கு வரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை, நிரந்தர பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டுமெனவும், போக்குவரத்து கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமென்றும், போது மான நிதி ஒதுக்கீடு செய்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.