tamilnadu

img

2023க்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி.... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை:
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 விழுக்காடு குடிநீர் இணைப்பு வழங் கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட் டத்தின்கீழ் மேற்கொள் ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம், தில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நவ.3க்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமைச் செயலகத்திலிருந்து கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு திட்டங்கள் குறித்து அமைச் சர் எஸ். பி. வேலுமணி கூறுகையில், 2024ஆம் ஆண்டிற்குள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 79,395 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன.கடந்த 01.4.2020 வரை 126,89,000 வீடுகளில் 21,92000 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 1,04,97,000 வீடுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு 2020-21ஆம் ஆண்டிலும், 35 லட்சம் வீடுகளுக்கு 2021-22ஆம் ஆண்டிலும் மற்றும் 30 லட் சம் வீடுகளுக்கு 2022-23ஆம் ஆண்டிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி 2024ஆம் ஆண்டிற்கு ஓராண்டு முன்னதாகவே தமிழ்நாட்டில்  ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப் படும் என்று உறுதியளித்தார்.ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார்.இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஷ்வரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.