tamilnadu

img

வறண்டு போன கோமுகி அணை

விவசாயிகள் வேதனை தீருமா..?

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சி ராப்பாளையம் பகுதி விவசா யத்திற்கும், குடிநீருக்கும் ஆதார மாக இருக்கும் கோமுகி அணை தண்ணீ ரின்றி வறண்டு போய் இருப்பதால் விவசா யம் பொய்த்து போய்விடும் என்ற அச்சத்தில்  விவசாயிகள் வேதனையில் வாடு கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 2ம், தனியார் சர்க்கரை  ஆலைகள் 2ம் உள்ளன. இதில் 3 சர்க்கரை  ஆலைகள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராபாளையம் பகுதிகளை ஒட்டி உள்ளன. இப்பகுதியில் மரவள்ளி, உளுந்து, மஞ்சள், மக்காச்சோளம், நெல் என அதிக அளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளின் சாகுபடிக்கு பல்வேறு பாசன முறைகள் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ளன. முக்கியமாக சின்னசேலம், கச்சி ராப்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி நக ரங்களை ஒட்டியுள்ள கோமுகி அணை 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 46 அடி ஆகும். 57 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த அணையின் தண்ணீரை நம்பி உள்ளன. பருவமழை காலங்களில் கல்வ ராயன் மலையிலிருந்து வரக்கூடிய தண் ணீர் இந்த அணைக்கட்டில் தேங்கி நிற்கும்.

இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று நீர் பாசனம் மூலமும் விவசாயிகள் விவசாயம் செய்திட உதவு கிறது. மேலும் கால்வாய்களின் மூலம்  பல்வேறு ஏரிகளுக்கு இந்த தண்ணீர் சென்று அப்பகுதி பயிர் சாகுபடிக்கும் உதவு கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற் காக அக்டோபர், நவம்பர் மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்நிலை யில் தற்போதைய கோடை வெயிலின் கார ணமாக இந்த அணை முற்றிலுமாக வறண்டுபோய் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திட தண்ணீர் கிடைக்குமா என வேதனையில் உள்ளனர். "போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்தால்தான் இப்பகுதி விவசாயம் நடைபெற்று எங்களின் வாழ்  வில் சிறு முன்னேற்றமாவது ஏற்படும்" என  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அணையில் இருந்து சின்னசேலம் நகரில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வெட்டப்பட்ட கால்  வாய் பணியும் அரைகுறையாக நிற்பதால்  தொடர்ந்து பல ஆண்டுகளாக கோடைக் காலத்தில் சின்னசேலம் நகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. எனவே  பருவமழை தொடங்கும் முன் இந்த கால்வாய் பணியை முழுமையாக முடித்தால் சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர்  வந்து குடிநீர் பிரச்சினை தீரும்" என இப்  பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் டி.மாரிமுத்து கூறினார்.

-வி.சாமிநாதன்