tamilnadu

img

டாக்டர்.எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு விழா

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு விழா தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவியர்  கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட சிறு குளத்தில் பெண்கள் மணல் விளக்குகளை மிதக்க விட்டனர். மாணவிகள், பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின்பண்டங்களை பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். பெண்கள் நவதானியங்களின் முளைப் பயிர்களை எடுத்துச் சென்றனர். மேலும் இந்த விழாவில் வளையல் கடை, இளநீர் கடை, கிளி ஜோசியம் போன்ற கிராமத்துத் திருவிழாக் கடைகள்  இடம் பெற்றிருந்தன. இது ரம்மியமான கிராமப்புற சூழ்நிலையை உருவாக்கியது.