இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் துறைமுகம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை துவக்கப்பட்டுள்ளது. இந்த பாடச்சாலையை அண்மையில் எழுத்தாளர் கரன் கார்க்கி திறந்து வைத்தார். வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், மாணவர் சங்க பகுதி ஒருங்கிணைப்பாளர் பிருந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.