சென்னை, மார்ச் 18- தேர்தல் பத்திரங்களைப் பெற்று அம்பலப்பட்டுள்ள பாஜக பற்றி அறிக்கை விட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கி றதா? என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி யுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :–
“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை” என்று சொல்-வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தான் வகித்த பொதுப்பணித்துறை யில் ஒப்பந்தங்களை மொத்த-மாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத் துச் சிக்கிக் கொண்டவர் பழனி சாமி. குட்கா விற்பனையாளர்களி டம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனி யாக ஒரு அமைச்சரை வைத்திருந்த வர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத் தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய் தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசா ரணையில் சிக்கினார். தூத்துக்குடி யில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசா-ரணை ஆணை யத்தில், ‘முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்’ என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி.
பொள்ளாச்சி பாலியல் வழக் கில் சிக்கியவர் களைக் காப்பாற்றி யவர் பழனி-சாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகளே பழனி சாமி பெயரை வெளியில் சொன் னார்கள். இப்படிப்பட்ட நீண்ட தொரு ‘குற்றப்பட்டியல்’ கொண்ட பழனிசாமி, விடுத்துள்ள அறிக்கை யில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார். மண்புழு வைப் போல ஊர்ந்து போய் நாற் காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோ கம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கி யதை உண்டா?
திமுக சார்பில் யாரிடம் நன் கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர் தல் ஆணையத்துக்குத் தெரி வித்துள்ளோம். இதில் மறைப்ப தற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத் தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் தரப் படவில்லை. ஆன்-லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றி-யது திமுக அரசுதான்.
ஆளுநரைக் கண்டித்தாரா?
பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது திமுக அரசுதான். அந்தச் சட்டத் துக்கு அனுமதி வழங்காமல் தாம தித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பி னோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி? இப்போது ஏன் அறிக்கை வெளி யிடுகிறார் பழனிசாமி? தனது எஜ மானர்களான பாஜகவைக் காப் பாற்றுவதற்காக அறிக்கை விடு கிறார்!
அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறு-வனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளன. இதன் மூலமாக, ‘மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக’ என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதி லும் சொல்ல முடியவில்லை. இத்த கைய பாஜக பற்றி பழனிசாமி ஏதா வது கண்டித்துள்ளாரா?
டெண்டர் மோசடி!
‘பாஜகவுடன் கூட்டணியே கிடையாது’ என்று சொல்லும் பழனி சாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத் தைக் கண்டித்து அறிக்கை விட முது கெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரை யும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை ‘டெண்டர் மோசடி’ பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள் ளேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டு வார்களாம்! பழனிசாமி சொல்கி றார். அவர் கைக்கு அதிமுக எப் போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். பழனிசாமிக்கு எத் தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?
இவ்வாறு டி.ஆர். பாலு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அதிமுக கொடி சின்னம்: ஓ.பி.எஸ்-க்கு நிரந்தரத் தடை
சென்னை, மார்ச் 18- அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது.
அதிமுக பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகிய வற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல் வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் திங்களன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன் படுத்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை, நிரந்தரத் தடையாக விதித்து நீதி பதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ். கூறி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.