tamilnadu

img

மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் மனைவி பிலிஸ் காலமானார்.... சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி....

சென்னை:
தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவரும், அரசுக் குழந்தைகள் மருத்துவமனை மேனாள் கண்காணிப்பாளர் மற்றும் இயக்குநருமான குழந்தை நல மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம் துணைவியார் பிலிஸ்ரெக்ஸ் (வயது 71) ஜூலை 31 சனிக்கிழமையன்று இரவு 9 மணியளவில் காலமானார்.

அன்னாரது மறைவுச் செய்தியறிந்து அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.என்.எஸ்.வெங்கட்டராமன், பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், தீக்கதிர் மேலாளர் சி.கல்யாணசுந்தரம், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வேளச்சேரி பகுதி செயலாளர் வனஜாகுமாரி, மருத்துவர் காசி, மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு,பொதுபள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, இருதய அறுவை சிகிச்சை நிபுனர் வைத்தியநாதன், நரம்பியல் நிபுனர் வின்சென்ட் தம்புராஜ், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் சி.திருவேட்டை, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், சைதை ஜெ (தமுஎகச), மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.சாதிக்பாட்சா, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க நிர்வாகிகள் வீர பெருமாள், ஜாஹிர் உசேன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், அடையாறு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரம் கியூப்பிலி தீவு மயானத்தில் ஞாயிறன்று (ஆகஸ்ட்  1) மாலை அடக்கம் செய்யப்பட்டது.

;