திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
சென்னை, செப்.1- திமுக தலைமைக் கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி பெரி யார் விருது பாப்பம்மாள், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன், பேராசிரி யர் விருது வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஓசூரில் ‘தந்தை பெரியார்’ சதுக்கம்: அரசாணை வெளியீடு
சென்னை, செப்.1- தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் மனம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முனிஸ்வர் நகர், வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் ‘தந்தை பெரியார் சதுக்கம்” எனவும் ஆங்கிலத்தில் ‘தந்தை பெரியார் ஸ்கொயர் (Thanthai Periyar Square) எனவும் பெயர் சூட்ட ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட அனுமதி வழங்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கோரியதன் அடிப்படையில் ஒப்புதலுக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் விவகாரம் : ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை
சென்னை, செப்.1- தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன.
இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோச னைக் கூட்டம், தலைமைச் செயலர் முரு கானந்தம் தலைமையில் செப்டம்பர் 2 (இன்று) மதியம் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பா ளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் பங் கேற்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் தெரிவித்து கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பதற்கான ஏற்பாடு களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.