tamilnadu

சென்னையில் திமுக உண்ணாநிலை போராட்டம் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, ஜூலை 6- இந்திய திருநாட்டை, ‘காவல்துறை ராஜ்யமாக’ மாற்றும் வகையில், ஒன்றிய  பாஜக அரசு அமல்படுத்தி யுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் சட்டத்துறை செய லாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். கட்சி யின் பொதுச் செயலாளர் துரை முருகன் போராட்டத்தை துவக்கி வைத்தார்.  ஒன்றிய முன்னாள் நிதி யமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், சிபிஐ மாநிலச்  செயலாளர் இரா. முத்தர சன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி  சிவா, முஸ்லிம் லீக் தேசிய  தலைவர் கே.எம். காதர் மொய்தீன், மூத்த பத்திரிகை யாளர்கள் என். ராம், ஏ.எஸ். பன்னீர்செல்வம், மமக தலைவர் ஜவாஹிருல்லா,  திமுக தலைமை சட்ட ஆலோ சகர் பி. வில்சன், சட்டத்  திட்ட திருத்த குழுச் செயலா ளர் இரா. கிரிராஜன் எம்.பி  உள்ளிட்ட பலர் உரையாற்றி னர்.

அமைச்சர்கள் பி.கே.  சேகர்பாபு, மா. சுப்பிரமணி யன், திமுக சட்டத்துறைத் தலைவர் இரா. விடுதலை, சட்டத்துறை இணைச் செய லாளர் பரந்தாமன் எம்எல்ஏ  ஆகியோர் முன்னிலை வகித்  தனர். சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்  சந்திரன் வரவேற்று பேசி னார். திமுக துணைப் பொதுச்  செயலாளர் ஆ. ராசா நிறை வுரையாற்றினார்.