tamilnadu

img

விக்கிரவாண்டியில் திமுக வெற்றி உறுதி!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த ஒரு மாதத்திற் குள் இடைத்தேர்தலை சந்திக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா  கூட்டணி சார்பில் அன்னியூர் ஏ.சிவா  களம் காண்கிறார். திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் அமைப்பு தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர மாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி ஒரு கண்ணோட்டம் ...

விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்து தென் ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது 1951 ஆம் ஆண்டு உருவானது விக்கிரவாண்டி தொகுதி. அதன்பிறகு, தொகுதி மறுசீரமைப்பில் 1957 ஆம் ஆண்டு வளவனூர் தொகுதியானது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1967 ஆம் ஆண்டு வளவனூர் தனித் தொகு தியாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் கண்ட மங்கலம் தனி தொகுதியாக உருவாகி யது. 2011 ஆம் ஆண்டில் மீண்டும்  விக்கிரவாண்டி பொது தொகுதியா னது.

தற்போதைய விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட 45 ஊராட்சிகள்,  விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட 51 ஊராட்சிகள், கோலி யனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7 ஊராட்சிகள் மற்றும் விக்கிர வாண்டி பேரூராட்சிகள் உள்ளடக்கி யுள்ளது.

விக்கிரவாண்டியை பொறுத்த வரைக்கும் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரி நிலமாக உள்ளதால் மழையை நம்பியே விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது. நெல், கரும்பு, நிலக்கடலை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

இப்பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினால் படித்த இளைஞர்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்ட மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அன்று திமுக வேட்பாளர் ராதாமணி 2வது இடத்தை பிடித்தார். இந்த தேர்தலில் சிபிஎம் அதிமுக கூட்டணியில் இருந்த்து.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக  சார்பில் போட்டியிட்ட ராதா மணியே  போட்டியிட்டார். அவர், அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். 2019 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதா மணி உடல் நலக்குறை வால் மரணமடைந்தார். இதனால்,  நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் முதன் முறையாக களம் இறங்கிய புகழேந்தி, அன்றைக்கு ஆளும் கட்சியான அதிமுக வின்  முத்தமிழ் செல்வத்திடம் தோல்வி யடைந்தார். அதன் பிறகு, 2021 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட புகழேந்தி, முத்தமிழ் செல்வத்தை வீழ்த்தினார்.

தொடரும் தோல்வி : விரக்தியில் எடப்பாடி !

அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்த எடப்பாடிக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் முதல் தோல்வியா கும். அன்றைக்கு தொடங்கிய அவரது தோல்வி பயணம் வரிசையாக 10 தேர்தலிலும் தொடர்கிறது. 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல், 22 தொகுதிகள் சட்டமன்ற இடைத் தேர்தல், 2020 ஆம்  ஆண்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்,  2021 சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல், தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் சந்தித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. அதனால்தான் விக்கிரவாண்டி தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சி  புறக்கணிக்கிறது. 

 பரிதவிக்கும் பாமக, நாதக!

தேர்தல் அறிவிப்பு வெளியா னதுமே திமுக வேட்பாளரை அறிவித்து  பிரச்சாரத்தையும் துவக்கியது. இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் கூட்டணியான தேமுதிக  இரு கட்சிகளும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டன. பாஜகவும் கூட்டாளியான பாமகவுக்கு தள்ளி விட்டது. “பிரதான எதிர்க்கட்சி போட்டியிலிருந்து விலகி தேர்தலை புறக்கணித்து இருப்பதால் ஆளும்  திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி நடத்திய உண்ணாநிலை போராட்டத் தில் சீமான் பங்கேற்றார்.  அதன் மூலம் அதிமுகவின் அனுதாப வாக்கு களை பெற முடியும் என்று நம்பு கிறார். 

அவரைவிட ஒரு படி மேலே சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப் படங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.  பாமக, நாதக  கட்சிகளுக்கு மக்களவைத் தேர்தலின் போது கிடைத்த அளவுக்கு இந்த முறை வாக்குகள் கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். மிக சொற்ப வாக்குகள் கிடைக்கும் என்பதால் வைப்பு தொகையை கூட திரும்ப முடியாத பரிதாப நிலை ஏற்படுவது உறுதி. 

சி.ஸ்ரீராமுலு, ஏ.காளிதாஸ்