சென்னை,ஜூன் 24- அக்டோபர் 27ஆம் தேதி அன்று தீபா வளிப் பண்டிகையை யொட்டி லட்சக்க ணக்கானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட ரயிலில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்போர், ஜூன் 24 முதல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் அறி வித்தது. அதன்படி, அக்டோபர் 22ஆம் தேதிக்கான ரயில்களுக்கு திங்கள் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. அக்டோபர் 23ஆம் தேதி அன்று ரயிலில் பயணிக்க திட்டமிட்டு இருப்போர் ஜூன் 25 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 24 ஆம் தேதி பயணிக்க ஜூன் 25,26 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 25ஆம் தேதி செல்வதற்கு வியாழக்கிழமை (ஜூன்27) முன்பதிவு தொடங்குகிறது. தீபா வளிக்கு ஒரு நாள் முன்னர் ரயிலில் பய ணிக்க, வெள்ளிக்கிழமையன்று (ஜூன்28) முன்பதிவு செய்து கொள்ளலாம்.