திருவண்ணாமலை, அக்.3- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நா. முத்து வேலன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மு. பாலாஜி வரவேற்றார். சிந்துவெளி பண்பாடு யாருடையது என்ற தலைப்பில் ஒடிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஆர். பால கிருஷ்ணன் உரையாற்றி னார். வரலாறும் – திரிபும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரை யாற்றினார். திருவண்ணா மலை வரலாற்று ஆய்வு நடு வத்தின் செயலாளர் சா. பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.செந்தில்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பரிதிமாற் கலைஞன் நன்றி கூறினார்.