தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை சேர்க்கப்பட்ட 224 ஆண்டுச் சந்தாக்கள், 63 ஆறுமாத சந்தாக்கள் என மொத்தம் 287 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ. 5 லட்சத்து 14 ஆயிரத்து 150-ஐ, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் வழங்கினார். தீக்கதிர் பொறுப்பாளர் ஆர்.டி. முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவராமன், வீரமணி, நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.