tamilnadu

img

மாயமான விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை, ஜன.12- சென்னை தாம்பரம் விமானப்படை நிலை யத்திலிருந்து 2016ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி  அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. இதில் விமான ஊழி யர்கள் 6 பேர், 11 விமானப் படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர், கடற்படை ஆயுதக் கிடங்கு ஊழியர்கள் 8 பேர் என 29 பேர் பயணம் செய்த னர். தொடர்பு துண்டிக்கப் பட்டதும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ராடாருடன் கூடிய செயற்கைக்கோள் மூலமாகவும் கண் காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் செப்டம்பர் 15-ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறி விக்கப்பட்டது. இந்நிலையில், மாய மான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீ பத்தில்அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 3.4 கி.மீ. ஆழத்தில் கிடக்கும் பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமா னத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என பாது காப்பு அமைச்சகம் தெரி வித்துள்ளது.