சென்னை, ஜூலை 13 - “மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவிகித உள் ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும், அரசாணை 151-ஐ உடனடியாக திரும் பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ் விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ். காசி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சுகாதாரக் கட்டமைப்புக்கு காரணமான உள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மருத்துவ - பட்ட மேற்படிப்பு இடங்களில் 50 சதவிகி தத்தை அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப் படுகிறது.
எம்.பி.பி.எஸ். படித்த இளம் மருத்து வர்கள் அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றுவதற்கு, இத்தகைய உள் ஒதுக் கீடு ஊக்கமளிக்கிறது. அகில இந்திய அளவில் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்ப தற்கும், வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பை தொடர்வதற்கும் இதுவே அடிப்படை காரணமாகும்.
இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் சிறப்பு மருத்துவப் பட்டம் (MD/MS போன்ற) பெறுபவர்கள். ‘பணிமூப்பு’ வயது வரை அரசுப் பணியில் தொடர வேண்டியுள்ளதால், அரசு மருத்துவ மனைகளில் தேவையான சிறப்பு மருத் துவர்களை தக்கவைக்க முடிகிறது.
அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் அரசாணை 151
இந்நிலையில், மக்கள் நல்வாழ் வுத் துறை 01.07.2024 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணை ‘151’ அரசு மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பணி மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங் கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு, ஆண்டுக்கு ஆண்டு பரிசீலிக்கப்பட்டு, அதனடிப்ப டையில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த இருப்பதாக அரசாணை கூறுகிறது. இதற்குக் காரணமாக பல சிறப்புப் பிரிவுகளுக்குத் தேவை யான எண்ணிக்கையில் அரசு மருத்து வர்கள் இருப்பதாகக் கூறுகிறது.
கடந்த 2012-2013 முதல் அகில இந்திய பட்டமேற்படிப்புத் (PG NEET) தேர்வின் மூலம், மொத்த இடங்களில் 50 சதவிகிதத்தை அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கி வருவதால், மொத்தத்தில் 25 சதவிகித இடங்கள் மட்டுமே இத்தகைய உள் ஒதுக்கீட்டில் கிடைத்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை ஆபத்து
நீட் இளங்கலைத் தேர்வு நடை முறையில் உள்ளதன் விளைவாக எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்கள் அரசு மருத்துவப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பும், விருப்பமும் குறைந்து வருகிற இன்றைய சூழலில்- மொத்த 25 சதவிகித மேற்படிப்பு இடங்களில் மட்டுமே அரசுப்பணி மருத்துவர்க ளுக்கு மேற்படிப்பு ஒதுக்கீடு கிடைத்து வரும் பின்னணியில்- இந்த அர சாணை நடைமுறைப் படுத்தப்பட்டால் வரும் நாட்களில் பொதுசுகாதாரக் கட்ட மைப்பின் தொடர்சேவைக்குத் தேவை யான மருத்துவர்கள் அரசுப்பணியில் இருக்கமாட்டர்கள்.
தனியார் மருத்துவக்கல்லூரிகள் - மருத்துவமனைகளை ஒப்பிடும்போது ஊதியம் குறைவாக இருப்பினும் அர சுப் பணியில் உள்ள ஒதுக்கீடு காரணமா கவே எம்.பி.பி.எஸ். படித்த இளம் மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், புதிதாக துவக்கப்பட்டு நடைபெற்று வரும் பல கல்லூரிகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது முன்வைப்படுகின்றன. மேலும், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகா ரம் பெறுவதற்கும், இயங்கி வரும் மருத்துவக் கல்லூரிக்கு மறு அங்கீ காரம் பெறவும், மருத்துவர்களின் எண் ணிக்கை மிகவும் முக்கியமானதாகும்.
இச்சூழலில் தமிழ்நாட்டின் பொது சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்க வேண்டுமெனில், அரசு மருத்து வர்களுக்கு அளிக்கப்படும் உள் ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் அரசாணை 151-ஐ உடனடியாகத் திருப்பப்பெற வேண்டுமென்று தமிழக அரசை மக்களுக்கான மருத்துவர் அரங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.