மகாவிஷ்ணுவுக்கு மாற்றுத்திறனாளி ஆணையரகம் நோட்டீஸ்
சென்னை, செப்.10- ஆபாசபேச்சுபேர்வழி மகாவிஷ்ணு வுக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. பார்வையற்ற ஆசிரியரை அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசிய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால் தான் மாற்றுத் திறனாளிகளாக, ஏழை களாக பிறக்கிறார்கள் என பேசியதால் சர்ச்சை எழுந்தது. செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், சைதாப் பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோ ருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை,செப்.10- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட வடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமையன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட் டத்தால், பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிக்கு வந்தனர்.
பள்ளிகளின் வேலை நாட்கள் குறைப்பு
சென்னை,செப்.10- ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலை நாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் வேலை நாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலை நாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.