சென்னை,ஜூன் 12- ராஜராஜ சோழன் குறித்து, இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று உண்மைகளைத் தான் பேசினேன். என்னைப் போலவே பலரும் பேசினார்கள். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வியாழக்கிழமை (ஜூன்.13) விசாரணைக்கு வருகிறது.