tamilnadu

img

பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்

பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்

பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பேட்டி

 

சென்னை, ஜூலை 12- பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள் தொடங்கப்படும் என்று  சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறினார். சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:   கடந்த ஜூன் 30ம் தேதி திருச்சியில் பாது காப்புத் துறை ஓய்வூதி யர்களுக்கான சிறப்பு குறை தீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 7 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பாது காப்புத் துறை ஓய்வூதியர் கள் பங்கேற்றனர். அன்றைய தினமே 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குறை களுக்கு தீர்வு காணப் பட்டது. மீதமுள்ள 2000 குறைகள் ஒரு மாத காலத்தில் தீர்க்கப்படும். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓய்வூதியர்களின் குறைகளைக் கேட்டறிய 5 பிரச்சார வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் 5100 புகார்கள் பெறப்பட்டு அதில் 3 ஆயிரம் புகார்க ளுக்கு அப்போதே தீர்வு காணப்பட்டது. அதே இடத்தில் தீர்வுகாண முடி யாத 2000 புகார்களுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியாவிலேயே ஓய்வூதியர்களின் வீடுக ளுக்கே சென்று குறைக ளுக்குத் தீர்வு காணப்படு வது இது முதல்முறை. தமிழ கத்தில் அடுத்தகட்டமாக மதுரையில் நவம்பர் மாத மும், வேலூரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதமும் குறைதீர் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10 சதவீதம் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறாமல் இருந்தனர். வெளிநாடுக ளுக்குச் சென்றவர்கள், வேறு மாநிலங்களுக்குச் சென்றவர்கள் வாழ்நாள் சான்று பெறாமல் இருப்பர், அவர்களை கண்டறிந்து ஓய்வூதியம் வழங்க இத்திட்டம் உதவியது. ஓரிரு மாதங்களில் ஓய்வூதியர்கள் தொலை பேசி வாயிலாக குறை களை நிவர்த்தி செய்ய கால் சென்டர் அமைக்கப்பட வுள்ளது. மேலும் 12 மாவட் டங்களில் நேரடி குறைதீர் மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது பாதுகாப்பு ஓய்வூதியர்க ளுக்கு பிரச்சார வாகனம் குறித்தும், அதன் வாயி லாகக் கிடைக்கும் சேவை கள் குறித்தும் ஜெயசீலன் விளக்கினார்.