tamilnadu

img

மரபுகளை மீறிய தீட்சிதர்கள்: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்,செப்.27- சிதம்பரம் நடராஜர் கோயி லிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11 ஆம்  தேதி ஆகமவிதி, மரபுகளை மீறி சிவகாசி தொழிலதிபர் மகள், சென்னை தொழிலதி பர் மகன் திருமணத்திற்கு தீட்சிதர்கள் அனுமதி கொடுத்து ஆடம்பரமாக திரு மணம் நடத்தினர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை அரு கில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கற்பனைச்செல்வம், ராஜா, வாஞ்சிநாதன், மூர்த்தி, ஜெயசீலன், முத்து மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். பின்னர், செய்தியாளர் களை சந்தித்த ஆறுமுகம்,  “இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்தால் மரபு  மீறப்படும், புனிதம் கெட்டு விடும் என்றும் சிலர் கூறினர். ஆனால், சிதம்பரத்தில் தீட்சி தர்களே மரபுகளை மீறி யுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.