சென்னை, ஆக.31- உளுந்தூர்பேட்டையில் இளம் பெண்கள் சிறுமிகளைப் பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்திய கும்பல் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் இளம் பெண்களை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்திய சம்பவம் தமிழ கத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள் ளாக்கி உள்ளது. இச்சம்பவத்தை கண் டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கள் ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்தியுள்ளனர்.
உள்ளூர் காவல்துறை உதவியுடன் கல்பனா என்பவர் வலைதளங்கள் மூலம் இளம் பெண்களையும் சிறுமி களையும் பாலியல் வணிகத்தில் ஈடு படுத்தி உள்ளார். இதில் அரசியல்வாதி கள், தொழிலதிபர்கள் என பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தக வல்கள் வெளிவந்துள்ளன.
ஐந்தே நாட்களில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்
பிரச்சனையில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் 5 பேர் ஜூலை 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஜூலை 22-ஆம் தேதியே பிணையில் வெளிவந்துள்ள னர்.
குழந்தைகளை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்திய குற்றம் நடந்தி ருக்கிற போது இதுவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யா தது கடும் கண்டனத்திற்குரியது.
பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இச்சம்பவத்தில் உடனடி யாக குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியிருப்பது காவல்துறையின் நட வடிக்கைகள் மீது சந்தேகத்தை எழுப்பு கிறது.
எஸ்சி - எஸ்டி வன்கொடுமை: பிரிவுகளை பயன்படுத்தாதது ஏன்?
மேலும் இச்சம்பவத்தில் இருளர் பழங்குடியின பெண்களையும் பாலி யல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாக தக வல்கள் வந்திருக்கிற சூழலில் எஸ்.சி.- எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாததும், பிரச்சனையை மூடி மறைப்பதற்கான பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள் ளதை காட்டுகிறது.
இத்தகைய மோசமான சம்ப வத்தில் காவல்துறையின் நடவடிக்கை கள் போதுமான அளவில் இல்லை என் பது கண்கூடாக தெரிகிறது. ஏற்கெ னவே பாலியல் துன்புறுத்தலுக்கு உள் ளாக்கி பாதிப்புக்கு உள்ளானவர்களை காவல்துறையின் இத்தகைய மோச மான செயல்பாடுகள் இரண்டாம் நிலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
மகளிர் ஆணையம் நேரடி விசாரணை நடத்த வேண்டும்
எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டுக் காவல் துறையின் நடவடிக்கைகளை தீவி ரப்படுத்திட வேண்டும். குற்றத்திற்கு, உரிய பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக மகளிர் ஆணைய தலைவர் சம் பவ இடத்திற்கு சென்று நேரடி விசா ரணை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப் பித்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.