அயோத்தியில் ராணுவத்திற்கு சொந்தமான இடமிருந்த மஜா ஜம்தாரா பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தடையை மோடி அரசு அண்மையில் விலக்கிக் கொண்டது. இந்நிலையில், ராணுவத்திற்கான இடத்தை அதானி, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு சொந்தமான நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதனைக் குறிப்பிட்டு, “ராணுவத்திற்கான இடத்தை அதானி, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு கொடுப்பதற்காகவே ஆணையைத் திருத்தியிருக்கிறார்கள்” என்றும்; “தேசமாவது பக்தியாவது-அதானியே தேசம்!” என்றும் மோடி அரசை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் விமர்சித்துள்ளார்.