முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து இவர் முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறி ரவி என்பவர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் வழங்க கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது. அதை ஏற்ற நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
.