நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்குதல், நீட் தேர்வுமுறைகேடு மற்றும் கள்ளச்சாரயத்திற்கு காரணமான அனைவரையும் கைதுசெய்யக்கோரி சிபிஎம் சார்பில் திருப்பத்தூர் ஸ்டேட் பாங்க் எதிரில் தாலுகா செயலாளர் காசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் சி.கேசவன், ரவி, காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.