tamilnadu

img

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கனிம மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி செங்கற்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரிய தொழிலாளர்கள் சம்மேளன மாநில இணைச்செயலாளர் அருள்தாஸ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு கிளை செயலாளர் என்.பால்ராஜ், எல்பிஎப் மாநிலச் இணைச் செயலாளர் சர்க்கரை, ஏஇஎஸ்யு சென்னை மண்டல செயலாளர் கோவிந்தசாமி, தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பின் செங்கல்பட்டு கிளை செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் பேசினர்.