வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் வெங்காயத்துடன் ஒரு செல்பி என்கிற நூதன போராட்டம் ராயபுரம் மின்ட் பகுதியில் நடைபெற்றது. மாதர் சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி,கோடிஸ்வரி, பவானி, வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்டத் தலைவர் கே.எஸ்.கார்த்திக், செயலாளர் சரவணன் தமிழன், பொருளாளர் மஞ்சுளா, நிர்வாகி முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
************
வெங்காய விலை உயர்வை கண்டித்து திங்களன்று (டிச. 9) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்டத் தலைவர் எஸ். சரவணசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.