புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மூத்த தலைவர் மூசா, மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், முத்துக்குமரன், ஜெயசித்ரா, ஒன்றிய செயலாளர்கள் செல்லையா, மனோகரன், காளி கோவிந்தராசு, சிதம்பரம் நகர்குழு உறுப்பினர்கள் மல்லிகா ஜின்னா அமுதா அஷ்ரப் அலி தியாகராஜன் ராஜா ஆட்டோ சங்க செயலாளர் மாரியப்பன், நகர்க்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.