tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் சார்பில், திங்களன்று (ஜூலை.15) காஞ்சிபுரம், பெரியார் தூண் அருகே  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயலாளர் சி.சங்கர், வழக்கறிஞர் ஜெ.பிரதாபன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கே.பெருமாள், கு.ஆறுமுகம் வி.சிவப்பிரகாசம், எஸ்.சீனிவாசன், காஞ்சி மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், சி.மகேந்திரன், ஜி.லட்சுமிபதி, கே.ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.