கரூர், ஜூன் 25 - கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், மாத்தூர் கிராம நிர்வாக அலுவல கத்திற்கு 2023 அக்டோபர் முதல் இன்று வரை தனி கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால், பொதுமக்கள் அரசு சான்றிதழ்களை பெறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்ற னர். இதனால் பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக, மாத்தூரில் தனி கிராம நிர்வாக அலுவலரை கரூர் மாவட்ட நிர்வாகம் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கட வூர் வட்டக்குழு சார்பில் மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டக் குழு உறுப்பினர் பெருமாள் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, கடவூர் வட்டச் செய லாளர் பி.பழனிவேல், விதொச வட்டச் செயலாளர் பி.வேல்முருகன், விவசாய சங்க வட்டச் செயலாளர் ரவி கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.