ஆன்லைனில் அழிந்த தரவுகளுக்கு தெளிவுரை கேட்காமல், கொடுக்கப்படும் ஆவணங்களை ஏற்று ஒப்புதல் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகங்கள் முன்பு செவ்வாயன்று (ஜூலை 16), திருவள்ளூர் மற்றும் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தலைமையில் கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.நாகராஜ், பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சி.சீனு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், மாவட்ட நிர்வாகிகள் வேலன், ஆறுமுகம், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.