மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கோரி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்து சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, வட்டத் தலைவர் பாஸ்கர், வட்டச் செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.