tamilnadu

img

சென்னை விரைவு செய்திகள்

மின் தேவை 22,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு

 சென்னை, மார்ச் 5-  வரும் கோடை காலத்தில் தினசரி மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரிக்கும். தமிழகம் முழுவதும் 2.5 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகள், 40 லட்சம் வணிகப் பயன்பாடு மின் இணைப்புகள், 25லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக மின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இதில் 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சியவை மத்திய தொகுப்பில் இருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் மின்தேவை அதிகரிக்கும்.

தூய்மை பணியாளர்களை  மீண்டும் பணியில் சேர்க்க கோரிக்கை கடலூர்,

நிறுத்தி வைத்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.  கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் 2015 ஆண்டு தூய்மை பணியில் வேலை செய்திருந்த 10  தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்றத்தில் அதிக பணியாளர்கள் வேலையில் இருப்பதால் 10 தொழிலாளர்களை 2016ம் ஆண்டு வேலையில் இருந்து நிறுத்தி வைத்துள்ளனர். மீண்டும், தூய்மை பணியாளர்கள் வேலைக்கு பணி நியமனம் செய்கிற போது  வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன் பேரில் தற்போது ஊராட்சியில் வேலைக்கு புதிய ஆட்கள் எடுப்பதாக தகவல் அறிந்த  அந்த ஊழியர்கள் புதன்கிழமை குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளரிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.பி. தண்டபாணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஏ. வாசு, கே.சண்முகம், மற்றும் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

அடுக்குமாடி தங்கும்விடுதி:  வேலூர் ஆட்சியர் ஆய்வு

வேலூர், மார்ச் 5 - வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளை யார்குப்பத்தில் அரசு சார்பில்  250 படுக்கை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி தங்கும்விடுதி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிக்காக அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் குறைவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர்  சுப்புலட்சுமி  ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை அழைத்து, கட்டுமான பணிக்கு எங்கிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது என கேட்டார். அதற்கு அவர்கள் 2 போர்வெல் அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்து கிறோம். ஆனால் கட்டிட அடித்தள பகுதிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால் அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீரை எடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர், இனி குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம், தேவைப்பட்டால் கூடுதலாக மற்றொரு போர்வெல் அமைத்து தண்ணீர் பயன்படுத்தி கொள்ளுங்கள்' என உத்தரவிட்டார்.  மேலும் ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை தரமாகவும். விரைவாகவும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர் படவேட்டான், வேலூர் வட்டாட்சியர் முரளி,  வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.