சிறுபான்மையின மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை, மே 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பின்தங்கிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிறுபான்மை மக்கள் நலக்குழு வலி யுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு, செங்கம், திரு வண்ணாமலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் பலர் வசித்து வருகின்றனர். வாடகை வீடுகளில், புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் அந்த மக்களுக்கு உரிய இடங்க ளில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஏ. அப்துல் காதர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் .வீரபத்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன் மற்றும் இஸ்லாமிய மக்கள் ஆகியோர் உடனிருந்தனர். செங்கம் நகரப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு பட்டா வழங்கக் கோரி 2023 ஆம் ஆண்டு வட்டாட்சி யரிடம் மனு அளித்தோம். அதேபோல், வந்த வாசி அடுத்த மாலையிட்டாங் குப்பம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங் களுக்கு பட்டா கேட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். இது வரைக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை. விளிம்பு நிலையில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு விரை வில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.