குடிசையில்லா ஊராட்சியாக கோண்டூரை மாற்றக் கோரிக்கை
கடலூர்,ஜூன் 28 - முதலமைச்சரின் “கலைஞர் கனவு இல்லம் திட்டம்”செயலாக்கம் சம்மந்தமான சிறப்பு கிராம சபை கூட்டம் கோண்டூரில் நடைபெற்றது.
கடலூர் அனைத்துக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கனவு இல்லம் கோண்டூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு கோரி கூட்டமைப்பின் இணைபொது செயலர் எஸ்.தேவநாதன் ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜியிடம் அளித்தார்.
அந்த மனுவில் கோண்டூர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், கோண்டூர் ஊராட்சியை குடிசைவீடுகள் இல்லாத ஊராட்சியாக மாற்றவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, ஜூன் 28- காரைக்கால் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜூலை 2ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து, இரவு 9 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16175) நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படும்.
ஜூலை 3ஆம் தேதி காரைக்காலில் இருந்து, மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16187), அதற்கு மாற்றாக நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன ஊழியர் கைது
சென்னை, ஜூன் 28- சென்னை வேளச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி சீத்தாபதி நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் ஜெயக்குமார் (58). இவர் தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஜெயக்குமார், தரமணி பகுதியில் தினசரி நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அதன்படி, ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு நடைப் பயிற்சி செல்லும்போது, அங்கு வந்த ஒரு சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அந்த மாணவி, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர்.