புதுச்சேரி, ஜூலை 9- நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி வில்லியனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும், இலவச அரிசியை தடையின்றி வழங்க வேண்டும், கிராமப்புற வேலை திட்டத்தில் அனைத்து கொம்யூன் பஞ்சாய்த்து களிலும் வேலையைதுவக்க வேண்டும், மின்சார வரி, சொத்துவரிகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. புதுச்சேரி வில்லியனூர் வட்டாட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வில்லியனூர் கொம்யூன் செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார். பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், கெம்யூன்குழு உறுப்பினர்கள் முருகையன், மணிபாலன், முனியாண்டி, தியாகராஜன், இன்னரசு உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் வட்டாரவளர்ச்சித் துறை அதி காரியை சந்தித்து மங்களம் உள்ளிட்ட பகுதி களில் நூறுநாள்வேலை திட்டத்தை உடனே துவக்க வேண்டும் இல்லையென்றால் பய னாளிகளோடு சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர்.