தமிழகத்தில் நவம்பர் 11 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான, 14 ஆயிரத்து 757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர் கூறுகையில்,
13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட குறைந்த அளவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த வருடம், 18,544 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த வருடம், 14,757 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறகு, 15, 16, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர வசதியாக இருக்கும்.
வழக்கம்போல சென்னையில் 5 இடங்களில் இருந்து, பேருந்து முன்பதிவு மையங்கள் செயல்படும் என கூறியுள்ளார்.