tamilnadu

img

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்....

சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தீபாவளி பண்டிகைக்காக 11ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.முதல் கட்டமாக புதன்கிழமை (11ஆம் தேதி முதல்) சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தினமும் 2,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது சென்னையில் இருந்து கூடுதலாக 225 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு 900 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலர் சொந்த ஊர்களிலேயே உள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக விடப்படும் பஸ்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

பிற மாநிலங்களைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு மட்டும் பஸ்கள் விடப்படும். மற்ற மாநிலங்களுக்கு பஸ்கள் விடப்படாது.தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல கடந்த மாதம் 14 ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன்பு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 1 லட்சத்துக் கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.இந்த ஆண்டு இதுவரை 70 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.சென்னையில் கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.www.tnstc.in என்ற இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக அறிந்து கொள்ளவும், புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய உதவி எண் களை பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.