சென்னை:
அரசுப் பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
பண்டிகை காலங்களில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்குசிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, சொந்த ஊர் செல்வதற்கு ஆன்லைன் பேருந்து டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.எஸ்இடிசி மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் சொந்த ஊர் செல்ல http://www.tnstc.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பயணிகள் குறைவாக இருப்பதால் முதற்கட்டமாக தீபாவளி பண்டிகை காலதi தில் 700 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.