கள்ளக்குறிச்சி, ஆக. 23- திருவெண்ணெய்நல்லூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிதாக வருவாய் வட்டம் உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருவெண்ணெநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் ஆகஸ்டு 22 வியாழனன்று நடை பெற்ற மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சிவக்குமார் வரவேற்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.கே.பூவராகன், டி.எஸ்.மோகன், மூத்த தலைவர் கே.எம்.ஜெயராமன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஏ.வீராசாமி, ஏ.சக்தி மற்றும் ஐ.ஷேக்சலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.பழனி, ஆர்.வீரன், ஏ.ஏழுமலை, எஸ்.குமார், கே. ராணி, ஆர்.சங்கர் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர். விவசாயத்தை பாதுகாத்திட தென் பெண்ணையாறு, மலட்டாறு ஆகியவற்றில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தடுப்பணை அமைக்க வேண்டும், அரசுக் கல்லூரி செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, அரசினர் மாணவர், மாணவி யர் விடுதி அமைக்க வேண்டும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சொந்த இடத்தில் போதுமான கட்டிட வசதிகளுடன் விரிவுபடுத்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் நடந்த மாநாட்டிற்கு வட்டச் செயலாளர் பி.மணி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா. பெரியசாமி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், டி.எம். ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றினர். செயற்குழு உறுப்பினர்கள் எம் ஆறு முகம், ஆர்.சீனிவாசன் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.நடேசன், வட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.செல்வராசு, ஜி அருள்தாஸ், வி.சிவா, என்.தனலட்சுமி உள்ளிட்ட ஏராள மானோர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பங் கேற்றனர்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும், சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சிவரை நடைபெறும் ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும், வட்டம் முழுவதும் அனைத்து கிரா மங்களிலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும், அனைத்து கிராமப்புற சாலை களை புதுப்பிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பொது கழிப்பிட வசதி ஏற் படுத்த வேண்டும், வறட்சியால் காய்ந்து போன கரும்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்வரி உயர்வினை ரத்து செய்யவேண்டும், புது உச்சிமேடு கிராமத்தை தனி வருவாய் கிராம மாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.