tamilnadu

img

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை!

சென்னை, மே 13-
சென்னையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை மணலியில் சிறுதானிய வியா பார கடை நடத்தி வருபவர் ஜெகநாதன் (40). இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்க ளது மகள் காவியா (13). ஜெகநாதனுக்கு மணலியில் சொந்த வீட்டு மனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.40 லட்சம் கடன் வாங்கி கட்டு மான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே,ஜெகநாதனுக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி பல முறை கேட்டுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜெகநாதன் குடும்பத்து டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள் ளார். 

அதன்படி, திங்களன்று (மே 13) மகள் காவியாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று உடலை படுக்கையில் சாய்த்து வைத்துள்ளார். பின்னர், ஜெகநாதன், அவரது மனைவி லோகேஸ்வரியும் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெகநாதன் தாயார் தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் சந்தேகம டைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜெகநாதன், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து மணலி காவல் நிலையத் திற்கு தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.