திருவள்ளூர், ஜூலை 1- இருளர் இன மக்களின் சுடுகாடு மற்றும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்க வலியுறுத்தி வட்டாட்சி யர் அலுவலகத்தை விவசாயி கள் சங்கத்தினர் முற்றுகை யிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலை ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் 100 ஆண்டுக்கு மேலாக சுடுகாட்டிற்காக 28 சென்ட் நிலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கியுள்ளார். இதன் அருகே இருளர் இன மக்களின் சுடுகாடு வருவதால், இவர்களுடன் விலை பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் சுகாடு, பாதையை இணைத்து சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர். இதற்கு எதிப்பு தெரிவித்த இருளர் இன மக்கள் மீதே அவர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளார். பின்னர் இருளர் இன மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாடு, பாதையை மீட்டுத் தரவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இருளர் இன மக்கள் பாடை ஊர்வல மாக வந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டாட்சியர் சுரேஷ்பாபு, 15 நாட்க ளுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்ப ட்டது. இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜெ.அருள் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.எஸ். கண்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், பொருளா ளர் எம்.சண்முகவேல், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மோ.ஜேம்ஸ், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், விசிக மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் உட்பட பலர் பேசினர்.